Tuesday, September 11, 2012

முழுமையும் மன்னிக்கப்பட்டது

எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ. எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ. அவர்கள் பாக்கியவான்கள். ( ரோமர் 4:7 )

மகன் செய்த குற்றத்திற்க்காக அவனை ஒரு மணிநேரம் அறையிலே தனிமையில் இருத்திவிட்டார். தந்தையார். ஒரு மணிநேரம் கழித்ததும் ஒரு கடதாசி தாளுடன் அறையைவிட்டு வெளியில் வந்த மகன் நேராக தகப்பனிடம் சென்றான். அப்பா நான் செய்த தவறுகளையெல்லாம் இத்தாளிலேயே எழுதியுள்ளேன். நான் இனிமேல் இப்படியாகச் செய்யமாட்டேன். என்று மனம் வருந்தி கேட்டுக்கொண்டான். அத்தாளை வாங்கிய தந்தையார் அதில் உள்ளவற்றையெல்லாம் ஒரு இறப்பரினால் அழித்துவிட்டு மகனே எல்லாவற்றையும் நான் மன்னித்து விட்டேன். இனி நல்லவனாய் பொறுப்புள்ளவனாய் நடந்து கொள்வாய் என்று நம்புகிறேன் என்றார்.

எழுதப்பட்ட தாள் எவ்விதம் வெறுமையாக்கப்பட்டதோ அதுபோலவே கறைபடிந்த எமது பாவ வாழ்வும் இயேசுவின் இரத்தத்தினால் ஒரு வெள்ளை தாளைப்போல சுத்திகரிக்கப்படுகிறது. தீயவர் திருடர், கொடியவர், கொலைஞர் இப்படியாக எத்தனையோ பேரின் வாழ்வு தேவனால் தொடப்பட்டு மாற்றங்கள் கண்டிருக்கிறது. செய்த குற்றத்திற்க்காக துக்குத்தண்டனைக்கு காத்திருந்த எத்தனையோ பேரின் வாழ்வும்கூடää சிறச்சாலையில் வைத்து தேவனால் தொடப்பட்டுள்ளது. துக்கு தண்டனையால் அவர்களின் உயிர் உடலைவிட்டு பிரிந்து போனாலும், நித்திய நித்தியமாய் தேவனோடுகூட வாழும் சிலாக்கியத்தை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். நாம் விரும்பி பாடுகிற "ஒ தேவனுக்கு மகிமை என்னை துக்கியெடுத்தார்". என்ற பாடலை பாடியவரும் ஒரு துக்கு தண்டனை கைதியாகும். அவர் இரட்சிக்கப்பட்ட பின்னர், துக்கு தண்டனைக்காக அவரை அழைத்துச்சென்ற போதே அவர் இப்பாடலை இயற்றிப் பாடியதாகக் கூறப்படுகிறது. அவர் சந்தோஷத்தோடே அக்கரையில் நான் நின்று அவரை என்றென்றும் பாடுவேன் என்று பாடிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

தேவன் நமக்கு பாவத்திருந்து தரும் விடுதலை முற்றிலும் முழுமையானது. பாவத்தை வெறுத்து வெற்றியோடு வாழவே தேவன் எம்மை இரட்சித்திருக்கிறார். மாறாக பாவத்தைச் செய்து, செய்து மீண்டும் மீண்டும் மன்னிப்பு பெறவும் இரட்சிப்படையவுமல்ல என்பதை நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். தேவன் தரும் வெற்றியானது முற்றிலுமான முழுவதுமான வெற்றி. அதைப் பெற்றுக்கொண்டவர்கள் வாழ்வில் வீழ்ச்சிக்கு இடமேயில்லை. விழுந்தாலும் மீண்டும் வெற்றியோடு எழுந்து வெற்றி வாழ்வு வாழ்வார்கள். எனனில் அவர்கள் இப்பொழுது இயேசுவுக்குச் சொந்தமானவார்கள்.

எனவே அன்பான நண்பர்களே இறைவன் தருகின்ற இலவசமான இரட்சிப்பை பெற்று இறைவனுடைய அன்பில் வளர்ந்து அனேகருக்கு பிரியோஜனமாய் மாறுவோமாக..

அனுதினமும் கடைப்பிடிக்க பத்து கட்டளைகள்

1.ஒன்றை செய்யுங்கள்:
பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு (பிலி 3:13 - 20)

2. இரண்டையும் விட்டுவிடாதீஙக:
கிருபையும், சத்தியமும் (நீதி 3: 2 - 3)

3. மூன்றில் நிலைத்திருங்கள்:
விசுவாசம், நம்பிக்கை, அன்பு (1கொரி 13:`13)

4. நான்கையும் தரித்துக் கொள்ளுங்கள்:
இயேசு கிறிஸ்து, ஒளியின் ஆயுதங்கள், புதிய மனுஷனை, நீடிய பொறுமையை (ரோமர் 13:14, எபே 4:24, கொலோ3:12)

5. ஐந்தையும் அழித்துப் போடுங்கள்:
விபச்சாரம், அசுத்தம், மோகம், துரிச்சை விக்கிரகாராதனை, பொருளாசை (கொலோ 3:5,6)

6. ஆறையும் வெறுத்துவிங்கள்:
மேட்டிமையான கண், பொய் நாவு, குற்றாமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும்கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம் பேசும் பொய்சாட்சி நீதி6:16 -19

7. ஏழையும் எடுத்துக் கொள்ளுங்கள்:
சத்தியம் என்னும் கச்சை, நீதியென்னும் மார்க்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம் இரட்சணியமென்னும் தலைச்சீரா, தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம், ஜெபம் பண்ணி விழித்திருத்தல் (எபே 6: 13 - 18)

8. எட்டையும் விட்டுவிடாதீர்கள்
விசுவாசம், தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகம், அன்பு (2பேதுரு 1:5 - 9)

9. ஒன்பதையும் அனுபவமாக்குங்கள்:
(கலா 5:22 - 28) (அ)ஆவியின் கனிகள்: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். (ஆ) ஆவியின் வரங்கள்: ஞானத்தை போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், விசுவாசம்,குணமாக்கும் வரங்கள், அற்புதங்களைச் செய்யும் சக்தி, தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவிகளப்பகுத்தறிதல், பற்பல பாஷைகளை பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல்.

10. பத்தையும் பற்றிக் கொள்ளுங்கள்:
(மத் 22:35 - 40) கர்த்தருடைய கற்பனைகள்

கழுகு கூடு

கழுகு கூடு கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா? அதை நாம் பார்த்திருக்க நியாயமில்லை. அது கட்டும் முறை மிகவும் அருமையானது.

தாய் கழுகு தன் கூட்டைக் கட்ட ஆரம்பிக்கும்போது, நாம் நினைத்திராதபடிஇ முட்களையும், சிறுசிறு கற்களையும், கிளைகளையும் கொண்டு வந்து, கட்ட ஆரம்பிக்கும். அதைக் கட்டி முடித்தப்பின், அதன் மேல், மெதுவான மிருதுவான பஞ்சு, மெலிதான இறகுகள், தான் சாப்பிட்ட மிருகத்தின் தோல் இவற்றைக் கொண்டு அதன் மேல் பரப்பி, தன் முட்டைகளை சுகமாக இருக்கும்படி, அவற்றை ஒழுங்குப்படுத்தும். பின் முட்டையிட்டு, அதை அடைக்காத்து, அது குஞ்சுகளாக வந்து, அவற்றிற்கு இரையைக் கொண்டு வந்து ஊட்டி, அவற்றை வளர்க்கும். அவை வளர்ந்து, பறக்கும் நிலையை அடைந்தவுடன், தாய்க் கழுகு தன் கூட்டை கலைக்க ஆரம்பிக்கும். குஞ்சுகள் சொகுசாக இருந்த பஞ்சு மற்றும், மெலிதான இறகுகள் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டு விட்டு, முட்களையும், சிறுசிறு கூர்மையான கற்களையும் வெளியே வைத்துவிடும். அந்த மெத்தைப் போன்றவை போனவுடன், குஞ்சுகளுக்கு, கூடு குத்துகிற இடமாக, அவை தங்கியிருக்க முடியாத இடமாக மாறிப் போகும். அப்போது அவை தாமாக அந்தக் கூட்டைவிட்டு பறக்க ஆரம்பித்து, தன் இரையைத் தேட ஆரம்பிக்கும். பறக்கும் போது ஆரம்பம் மிகவும் கடினமாக இருக்கும் பறக்க எத்தணிக்கையில் குஞ்சுகள் கிழே விழுவதற்கு முற்ப்படும் அந்த வேளையில் தாய் கழுகு தன் செட்டைகளின் மேல் தன் குஞ்சுகளை சுமந்து செல்லும் ஆகவே தான் வேதாகமம் இப்படிக் கூறுகின்றது “ கழுகு தன் கூட்டை கலைத்து தன் குஞ்சுகளை செட்டைகளில் சுமந்து கொண்டு போவது போல தேவன் தாமே அவர்களை சுமந்தார். என்பதாக…
அன்பானவர்களே : நம்மில் கூட சிலர், அந்த கழுகின் குஞ்சுகளைப் போல தங்களுக்கு கிடைத்த கூட்டில் சுகமாய் இருக்கவே விரும்புகின்றனர். எழுந்து பறக்கக் கற்றுக்கொள்வோம்

தேவன் தாமே நம்மை சுமந்து சென்று பாதுகாத்தருள்வார்

உனக்காக மரித்தார்.

ஆபிரகாம்லிங்கன் அமெரிக்க ஜக்கிய நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நீக்ரோக்களை அதிகமாக நேசித்து அவர்கள் மீதிருந்த அடிமைதனத்தின் நுகத்தை முறிப்பதற்க்கு பாடுபட்டார். அடிமை வியாபாரத்தை ஒழிக்கும்படி அவர் சட்டத்தையும் இயற்றினார். இதனால் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா? ஒரு தீயவனின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். குண்டு பாய்ந்த அவர் உயிரற்ற சடலம் அவரின் சொந்த ஊரான எலினா என்னுமிடத்திற்;கு திறந்த வண்டி மூலம் கொண்டு வரப்பட்டது. ஆயிரம் ஆயிரமாம் மக்கள் தங்கள் தலைவனுக்கு கடைசி அஞ்சலி செலுத்தினார்கள். அப்பொழுது ஒரு நீக்ரோ மாது, ஆபிரகாம்லிங்கனின் இறுதிக் கிரிகைகளை காண அவ்விடத்திற்க்கு விரைந்து வந்தாள். ஆனால் ஜனக்கூட்டமோ மிக அதிகமாய் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது அவள் தன் மகனைக் கையினால் பிடித்து ஜனக்கூட்டத்திற்க்கு மேலாக உயர்த்தி “ மகனே பார் நன்றாக பார் அவர் உனக்காக மரித்தார்” என்று கதறிக்கொண்டு.



“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார்.

உன்னைத்தான்…

.......தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்க்கு வரவளைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயியும்….. ( 1 பேதுரு 2 : 9 )

நாம் மகிழ்ச்சியாயிருப்பதை இந்த உலகமொ உலகத்தின் அதிபதியோ விரும்புவதில்லை. மகிழ்ச்சியுற வேண்டியவற்றை நாம் சிந்திக்காதபடி பாரங்களை ஏற்றி நம்மை துக்கத்தில் ஆழ்த்துவதுதான் இவ்வுலகத்தின் தந்திரம். நாமும் அநியாயமாக அதற்க்குள் மாண்டுபோகிறோம். வாழ்நாட்க்களை வீணடிக்கிறோம்.

ஒரு பிரசித்திபெற்ற மேடையில் தாலந்துகளுக்கான போட்டி நடந்தது. ஆடம்பரமான பல போட்டியாளர்கள் மேடையேறி மக்கை ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர். அந்த வரிசையிலே ஒரு பெண் எறினாள். மண்டபத்திலே “ஊஊஊ” என்ற ஒரு சத்தம். இவளால் என்ன செய்யமுடியும் என்ற பரிகாசம்தான். ஆனால்அவள் ஒலிபெருக்கியை கையில் எடுத்து உதட்டருகே கொண்டு சென்றுபோது அந்த பிரமாண்டமான மண்டபமே அமைதியானது. இப்படி ஒரு குரலா? எல்லோரும் இருக்கையை விட்டு எழுந்து விட்டனர். கரகோஷம் வானைப்பிளந்தது. மத்தியஸ்தர்களும் அசைந்துவிட்டனர். ²இவளால் முடியாதே² என்று நினைக்த்தக்க இந்த எளிமையான பெண்ணின் வாயிலிருந்து இப்படியொரு அற்புத பாடலா? 2009 ம் பிரித்தானியாவில் நடந்த உண்மை சம்பவம் இது.

நீங்களும் நானும்கூட மிக எளியவர்கள் தான். உலகம் எங்களை கண்டிராது. குடும்பத்திலும் நம்மை கணக்கெடுக்காதிருக்கலாம். இவையெல்லாம் கிறிஸ்துவின் அழகு நம்மில் ஊற்றெடுத்துப் பாயும் வரைக்கும்தான் அந்த அழகு மாத்திரம் நம்மில் தெரியுமானால் இந்த உலகம் தன் முக்கில் விரல் வைக்கும். அப்படித்தான் தேவன் நம்மை திட்டமிட்டிருக்கிறார். நாம் வாழ்வு என்னும் மேடையில் நிற்கிறோம். நமது குடும்பத்தார் நண்பர்கள் சபை மக்கள் நம்மை அற்பமாய் நினைக்கிறவர்கள். யாவருக்கும் முன்னிலையில் நாம் நிற்கிறோம். இவனா! இவளா! இவனைப்பற்றி எனக்குத் தெரியாதா? இவளின் கடந்த கால நாற்றம் தெரியாதா? இப்படியாக எத்தனையெல்லாம் பேசுவார்கள். ஆனால் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும் நமது வாழ்விலிருந்து புறப்பட்டு பாயும் போது நிச்சயமாய் இந்த உலகமே எழுந்து நிற்கும். பேதுரு எழுதியவார்த்தைகள் எவ்வளவு மகத்தானவை. நம்மில் வெளிப்படுகின்ற கிறிஸ்துவின் அழகு ஜோடிக்கப்பட்டதல்ல. அது வாழ்வின் அனுபவம் இயேசு கிருபையாய் என்னை துக்கிவிட்ட அனுபவம் ஏராளமான அறிவாளிகள் மத்தியில் தமது புண்ணியங்களை அறிவிக்க தெரிந்தெடுத்தாரே அந்த கிருபையின் அனுபவம் எளியவர்களாகிய நம்மைத் தமது சன்னிதானத்தில் ராஜரீக ஆசாரியக் கூட்டமாக்கினாரே அந்த அனுபவம் இந்த கிருபை ஒன்றே போதுமே வாழ் நாள் முழுவதும் நாம் மகிழ்ச்சியாயிருக்க!



“பிதாவே உமது மகத்துவங்களை அறிவிக்க நீர் என்னையா தெரிந்தெடுத்தீர். இதை நினையாமற் போனேன். என்னை ஆட்கொள்ளும் ஜயா ஆமென்.”

Monday, September 10, 2012

இயேசு என் பக்கம்

‘தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோமர் 8:31)

நீ மாத்திரம் தனியே உல்லாசப் பிரயாணம் போகமுடியாது” என்று தனது தங்கையிடம் கூறினான் மோகன். ‘ நீ மிகவும் சிறு பெண் பேசாமல் வீட்டிலேயே இரு’ என்று ஏளனமும் செய்தான். அதனால் அவனுடைய சிறு தங்கை அழ ஆரம்பித்தாள். தன்னுடைய தந்தையாரிடம் ஓடி அப்பா அண்ணன் சொல்கிறான் உல்லாசப் பிரயாணம் போக முடீயாதாம். நான் சிறு பெண்ணாம் என்று அழுதாள்.

அதற்கு அப்பா நீ அண்ணாவிடம் சொல் உல்லாசப்பிரயாணம் போவதா இல்லையா என்பதை அவன் தீர்மானிக் வேண்டியதில்லை. நான் தான் தீர்மானிக்க வேண்டும். என்று நீ உல்லாசப் பிரயாணம் போக வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்.இதைக் கேட்டவுடன் சிறுமிக்கு வந்த மகிழ்ச்சிக்க அளவேயில்லை. மோகனைப் பற்றி அவள் கவலைப்படவே இல்லை.

ஏனென்றால் அப்பா அவள் பக்கம் என்று அவளுக்கு நன்றாக புரிந்துவிட்டது. அண்ணா அப்பா சொல்லிவிட்டார் நான் போகலாமென்று நீ இனி ஒன்றும் செய்ய முடியாது என்று மோகனிடம் தைரியமாகக் கூறினாள்.

இதே போல்தான் பவுல் என்ற தேவனுடைய மனுதர் தேவனைப்பற்றி கூறும்போது ‘தேவன் என்னோடு கூட இருக்கும் போது நான் ஏன் பயப்படவேண்டும். என்று கேட்டார். சில வேளையில் மனிதர்கள் எம்மை விரோதிக்கலாம். அவர்கள் எம்மைப் பகைத்து எமக்கு தீங்கு செய்யவும் முனையலாம். ஆனால் எல்லாவற்றையும் விட சாத்தானோ நாம் இயேசு சுவாமிக்குள் சந்தோசமாக இருப்பதை விரும்பாதவனாகவே இருக்கின்றான்.ஆனால் இயேசு சுவாமி எம்மை நேசிக்கிறார். எமக்காக மரித்தார் எமக்காக இயேசு சுவாமி தம்முடைய உயிரையே பலியாகக் கொடுத்திருக்கும் போது மற்றக் காரியங்களை நிச்சயம் கொடாமலிருப்பாரா?இயேசு சுவாமி தன்னுடைய உயிரையே எமக்காக கொடுத்ததால் அவர் எவ்வளவாக நம்மை நேசிக்கிறார். ஆம் அவர் எம் பக்கம் இருக்கிறார். ஆகவே நம்மை யார் தோற்கடிக்க முடியும்? ஒருவராலும் முடியாது.ஆம் அன்பான நண்பர்களே இயேசு நம்மோடு இருக்கவே விரும்புகிறார். ஆனால் நாம் அவருக்கு இடங்கொடுத்தால் தானே அவர் நம் பக்கம் இருக்க முடியும். நீங்கள் உங்கள் உள்ளத்தை அவருக்கு கொடுத்துள்ளீர்களா? நீங்கள் அப்படி கொடுத்திருந்தால் அவர் உங்கள் பக்கம் இருப்பார். உங்களை விரோதிப்பவர்களை அல்லது சாத்தானைக் கண்டு நீங்கள் பயப்படாதீர்கள்.!உங்களுக்காக தமது உயிரையே கொடுத்த அவர் நிச்சயம் உங்களுக்காய் எதையும் செய்ய தயாராகவே இருப்பார். இன்றே அவரை உங்களுடையவராய் ஆக்கிக் கொள்ளுங்கள். இயேசு சுவாமி உங்கள் பாதுகாப்பாய் இருக்க இன்றே ஜெபியுங்கள்.

தீமைக்கு நன்மை செய்யப்பழகுவோம்

ஒரு தேவஊழியன் தான் தங்கியிருந்த கிராம மக்கள் மத்தியிலே நன் மதிப்பை பெற்றிருந்தார். யாவரும் அவரை நேசித்தனர். எந்தவொரு சிறு விடயமானாலும் அவரை நாடிப் போவார்கள். இதைக் கண்டு பொறாமை கொண்டனர் சிலர். ஊழியருக்கு விரோதமாக திட்டம் போட்டனர். அது ஊழியருக்கு தெரியவந்தது. தங்களது திட்டம் தெரிந்து அவர் ஓடி ஒளிந்திடுவார் என்று எண்ணினர். ஆனால் அந்த ஊழியரோ அவர்களேயே தேடிப் போனார். அவர்கள் எதிர்பார்த்திராததால் ஆச்சரியத்தில் வாயடைத்துப்போயினர். ஊழியர் அவர்களுடன் அமர்ந்து, தான் கொண்டுவந்த அன்புப் பரிசுகளையெல்லாம் அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து; உங்கள் நாலுபேருக்கும் ஒரு கம்பனியில் வேலைக்கு ஒழுங்கு செய்திருக்கிறேன். நாளைக்கே போய் வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள் என்றார். அவர்களோ வெட்கித் தலைகுனிந்தனர்.

அன்பான நண்பர்களே, நாம் தேவகரத்தில் இருக்கிறோம் என்ற உறுதி நமக்கு இருக்குமானால் நமக்கு எதிரே வருகிற எந்தத் தீங்குக்கும் நாம் பயப்படத்தேவையில்லை. மெய்யாகவே அவை நமக்குத் தீங்காகவே மாறாலாம். ஆனாலும் தேவன் நிர்ணயிக்காத எதுவும் நம்மை அணுகவே முடியாது. ஆகவே, கர்த்தருக்குள் வாழ்வது மெய்யானால் நாம் எதற்கும் பின்னடையத் தேவையில்லை. நம்மை எதிர்கொள்ளும் தீமையை, நமது நல்நடத்தை பின்னடையச் செய்யவேண்டும். அங்கே ஆண்டவர் மகிமைப்படுவார். ஆமென்

இறைவன் நல்லவர்

கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது, என்று பக்தன் சங்கிதம் 118 : 01 இல் கூறுகின்றான். இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகின்றது என்னவென்றால் அவர் நல்லவர் ஆனபடியினால் அவரை துதியுங்கள் என்று சொல்லப்படவில்லை அவரை துதியுங்கள் அவர் நல்லவர் என்று உறுதிபட கூறுகின்றார். எனனில் அவர் எப்பொழுதுமே எல்லோருக்கும் அவர் நல்லவர் சில வேளைகளில் நமக்கு எற்ப்படும் அசாதாரணமான சூழ்நிலைகள் இறைவன் நல்லவரா?.... என்று நம்மை சிந்திக்க துண்டும் அப்படியான வேளைகளிலும் இறைவன் நல்லவரே… என நான் உறுதிப்பட கூறுகின்றேன். அதற்கு சில காரணங்களை முன் வைக்கின்றேன்.

1. எல்லா உயிரினங்களையும் இறைவனே படைத்தார். ஆனால் மனிதனை விஷேசித்த விதமாக தமது சாயலாக படைத்தார் ஆகவே அவர் நல்லவர் அவனை சிந்திக்கும் படியாக சிறந்தவற்றை தெரிவு செய்யும் படியாக நிறைவான ஆற்றலை அவனுக்கு கொடுத்தார். ஆகவே அவர் நல்லவர். அதுமட்டுமல்லாது இப்பூமியில் உனக்கு எற்படும் அசாதாரணமான சூழ்நிலையின் போது நான் நல்லவரா? என சோதித்தறிவதை விட்டு விட்டு என்னை நோக்கி கூப்பிடு நான் உனக்கு மறு உத்தரவு கொடுப்பேன் எனக்கூறியிருக்கின்றாரே (அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான். நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன். ஆபத்தில் நானே அவனோடிருந்துää அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். சங் 91 : 15 )

ஆகவே அவர் நல்லவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தம் ஜீவனை நமக்காக தந்து பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்டெடுத்து நம்மோடு நித்தமும் உறவாட காத்திருக்கிறாரே… ஆகவே அவர் மிகவும் மிகவும் நல்லவர்

ஆகவே நமக்கு நம்முடைய வாழ்வில் எப்பேற்பட்ட காரியமாக இருந்தாலும் இறைவன் நல்லவர் என்பதை நம் நினைவில் நிறுத்தி வாழக்கற்றுக்கொண்டால் அவர் நமக்கு எப்பொழுதும் மிகவும் மிகவும் நல்லவர்.

ஆகவே கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.